×

ஆயிரம் விளக்கு பகுதியில் அரிசி ஏற்றுமதி செய்ததாக ரூ.55 லட்சம் மோசடி..!!

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள நிறுவனம் அரிசி ஏற்றுமதி செய்து தருவதாக ரூ.55 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. சூடானில் உள்ள சாகுல் ஹமீது என்பவர் தனது நிறுவனம் மூலம் அரிசி கொள்முதல் செய்ய சென்னை நிறுவனத்தை அணுகியுள்ளார். ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள முகமது ஜாகிர் உசேன் என்பவரது நிறுவனத்தை சாகுல் ஹமீது அணுகியுள்ளார்.

502 மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய 3 தவணையாக ரூ.55 லட்சத்தை முகமது ஜாகிர் உசேனுக்கு அனுப்பி உள்ளார். ரூ.55 லட்சத்தை பெற்றுக்கொண்டு அரிசியை ஏற்றுமதி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் முகமது ஜாகிர் உசேன். அரிசியை ஏற்றுமதி செய்யக் கூறியபோது அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக சாகுல் ஹமீது புகார் அளித்தார். சாகுல் ஹமீது அளித்த புகாரை அடுத்து தலைமறைவாக இருந்த முகமது ஜாகிர் உசேனை போலீசார் கைது செய்தனர்.

The post ஆயிரம் விளக்கு பகுதியில் அரிசி ஏற்றுமதி செய்ததாக ரூ.55 லட்சம் மோசடி..!! appeared first on Dinakaran.

Tags : Ayur Lampu ,CHENNAI ,Lantern ,Dinakaran ,
× RELATED சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது...